புத்திர தோஷம் நீங்க, குழந்தை பிறக்க, குழந்தை பெற பரிகார தலங்கள், kulanthai pakkiyam pera valigal


புத்திர தோஷம் நீங்க, குழந்தை பிறக்க, குழந்தை பெற பரிகார தலங்கள், kulanthai pakkiyam pera valigal:

திருமணத்திற்கு பின்பு சில பெண்களுக்கு பத்தாவது மாதத்திலேயே இந்த பாக்கியம் கிடைத்து விடுகிறது. ஒரு சிலருக்கு ஒரு வருடமோ, இரண்டு வருடமோ தள்ளி குழந்தை யோகம் அமைகிறது. இன்னும் சிலருக்கு 8, 10 வருடங்கள் கழித்துதான் குழந்தைபேறு கிடைக்கிறது. சிலருக்கு குழந்தை பாக்யம் இல்லாத நிலையும் ஏற்பட்டு விடுகிறது. ஒரு சிலருக்கு முதலில் ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. அதன்பிறகு ஆண் வாரிசுக்காக தவியாய்த் தவித்தாலும் அது கிடைப்பதில்லை. அதேபோல் முதலில் ஆண் குழந்தை பிறக்கும் தம்பதியர்களுக்கு பிறகு பெண் குழந்தை பாக்யம் ஏற்படுவதில்லை. அப்படியே கர்ப்பம் தரித்தாலும் அது தங்காமல் கருச்சிதைவு ஏற்பட்டு விடுகிறது. இதற்கு எல்லாம் என்ன காரணம்? எல்லா விஷயங்களுக்கும் ஜோதிட சாஸ்திரம் ஒரு திறவுகோலாக இருப்பதால், இந்த விஷயத்தில் ஜாதக கட்டம் என்ன சொல்கிறது?


ஜாதகத்தில் குழந்தை பிறக்க யோகம் உண்டா?

ஜாதக கட்டம் ஒவ்வொன்றிற்கும் ஒரு ஆதிபத்யம் உள்ளது. அந்த வகையில் ஐந்தாம் இடம், குழந்தை பாக்யத்தைக் குறிக்கும். அந்த வீட்டின் அதிபதியும் மிக முக்கியம். ஒரு பெண்ணின் ஜாதகத்தில் ஐந்தாம் இடத்தையும், ஒன்பதாம் இடத்தோடு, நான்காம் வீட்டையும் பார்க்க வேண்டும். இந்த 4, 5, 9 ஆகிய வீடுகள் (ராசிகள்) பலம் பெற்றும் அந்த வீட்டிற்குடைய கிரகங்கள் நீச்சம் அடையாமலும் 6, 8, 12ல் மறையாமலும் இருப்பது அவசியமாகும். நீச்ச கிரகத்துடன் சேராமல் இருப்பது மிக முக்கியமாகும். ஆண், பெண் இருவரின் ஜாதகங்களில் குரு, செவ்வாய், சுக்கிரனின் பங்களிப்பு மிகவும் முக்கியமாகும். குருவிற்கு புத்திர பாக்யம் தருவதில் மிக முக்கிய பங்கு
உண்டு. ஏனென்றால் குரு புத்திர காரகன் ஆவார். அதாவது புத்திர யோகத்தை தரக்கூடிய அதிகாரம் பெற்றவர். மேலும், போககாரகனும்கூட. அதாவது தம்பதிகளின் தாம்பத்தியத்தில் சம்போகம் எனும் போகசக்தியை தரக்கூடியவர். செவ்வாய் அருளால்தான் தாம்பத்யத்தில் முழுமையாக ஈடுபட முடியும்.

பெண்களின் மாதவிடாய் பிரச்னைகளுக்கு காரணமாக இருப்பவர் குரு பகவான். பெண்கள் பூப்பெய்துவதற்கும் இவரே முக்கிய காரணம். ரத்த சம்பந்தமான நோய்கள் இவர் மூலம் உண்டாகும்.

சுக்கிரன், சிற்றின்பத்தில் நாட்டம் கொள்ளச் செய்பவர். திகட்டாத தாம்பத்யத்தையும் ஈர்ப்பு சக்தியையும் தரக்கூடியவர் ஆண்களின் சுக்கிலத்திற்கும் பெண்களின் சுரோணிதத்திற்கும் இவரே காரண கர்த்தா. ஒரு தம்பதியின் ஜாதகங்களில் இந்த மூன்று கிரகங்கள் நல்ல வலிமையுடன் ஆட்சி, உச்சம், கேந்திரம், திரிகோணம் பெற்று நல்ல அம்சத்தில் இருந்தால் விரும்பிய புத்திர யோகம் தானாக கூடிவரும்.


குழந்தையின்மை குறை போக்க பரிகார தலங்கள்:


எல்லா கிரக அம்சங்கள், யோகம், பிராப்தம் இருந்தாலும் அதை அனுபவிக்கக்கூடிய நேரம், காலம் வரவேண்டும். குழந்தை யோகமும் அப்படித்தான். கணவன், மனைவி இருவருக்கோ அல்லது ஒருவருக்கோ லக்னாதிபதி, நான்காம் அதிபதி, ஐந்தாம் அதிபதி, ஒன்பதாம் அதிபதி ஆகியோரின் தசா, புக்தி, அந்தரங்களில் குழந்தை பாக்யம் கூடி வரும். ராகு-கேது திசைகளில் யோகாதிபதிகளின் புக்தியில் சந்ததி விருத்தி ஏற்படும். மற்ற தசாபுக்திகளில் தடைகள், கர்ப்பச்சிதைவு ஏற்பட்டால் உரிய பரிகார தலங்களுக்கு செல்வதன் மூலம் சத்புத்திர யோகம் கிடைக்கும்.

* கரு தந்து காத்திடும் திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை கோயில், கும்பகோணம்-தஞ்சை சாலையில் பாபநாசம் அருகே உள்ளது. குழந்தை பாக்யதடை, அடிக்கடி கருச்சிதைவு ஏற்படுபவர்கள் இத்தலத்து அம்பாளை பிரார்த்தித்து, இங்கு தரப்படும் பசுநெய், விளக்கெண்ணெய் பிரசாதத்தை முறைப்படி அருந்திவர தோஷ நிவர்த்தி ஏற்பட்டு புத்திரயோகம் கிட்டும்.

* கரு வளர்க்கும் கருவளர்ச்சேரி அகிலாண்டேஸ்வரி கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. கும்பகோணம்-திருவாரூர் சாலையில் மருதாநல்லூர் கிராமத்தை அடுத்து உள்ளது. இத்தலத்து அம்மனை பிரார்த்தித்துக் கொள்ள புத்திர பாக்யம் உண்டாகும். இங்கு தரப்படும் மஞ்சள் பிரசாதம் மிகவும் சக்தி வாய்ந்தது.

* ஒவ்வொரு மாதமும் சுவாதி நட்சத்திர நாளில், சென்னையை அடுத்துள்ள திருவாலங்காடு சென்று சிவனை பிரார்த்தித்து, அன்றைய தினம் தாம்பத்ய உறவு கொண்டால் சத்புத்திர யோகம் உண்டாகும்.

* கும்பகோணம் - மன்னார்குடி சாலையில் நீடாமங்கலம் பேருந்து நிலையத்திற்கு அருகில் புத்திர பிராப்தி தரும் சந்தானராமன் ஆலயம் உள்ளது. இங்கு ராமபிரான் சந்தான யோகம் தருகிறார். இங்கு ஒவ்வொரு மாதமும் புனர்பூச நட்சத்திர நாளில் விசேஷ அபிஷேகங்கள் நடைபெறும்போது ராமனை வழிபடுவது மிகச் சிறப்பாகும்.

இக்கோவிலில் முறையான பரிகாரங்களைச் செய்ய ஜோதிடரை அனுகவும்.
  - ஜோதிடர் சுப்பிரமணியம் M.A., Astro., செல்: 9894720277

Rahu kethu thosam pariharam, ராகு கேது தோஷம் விலக தோஷ பரிகாரங்கள், Sri Nagaraja Swami temple

தோஷ பரிகாரங்கள்: ராகு கேது தோஷம் விலக வணங்கவேண்டிய தெய்வங்கள்


நாகராஜா சுவாமி திருக்கோயில், நாகர்கோவில் 

(Sri Nagaraja Swami temple)


[Image1]


பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் :: நாகர்கோவில், கன்னியாகுமரி, தமிழ்நாடு

திருவிழா: தை மாதத்தில் பிரம்மோத்சவம், ஆவணி ஞாயிறு, ஆவணி ஆயில்யம் நட்சத்திர நாட்களில் விசேஷ பூஜை, கிருஷ்ண ஜெயந்தி, நவராத்திரி, திருக்கார்த்திகை.

பிரார்த்தனை: நாக தோஷம், இராகு, கேது தொடர்பான தோஷ நிவர்த்திக்கு இக்கோயிலில் வேண்டிக்கொள்கிறார்கள்

நேர்த்திக்கடன்: இங்கு வேண்டி, பிரார்த்தனை நிறைவேறியவர்கள் நாகராஜருக்கு பால் பாயாசம் படைத்து, பாலபிஷேகம் செய்வித்தும், கோயில் வளாகத்தில் நாகபிரதிஷ்டை செய்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.

இருப்பிடம் : நாகர்கோவில் வடசேரி மற்றும் மீனாட்சிபுரம் பஸ் ஸ்டாண்ட்களில் இருந்து ஒரு கி.மீ., தூரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது.

இக்கோவிலில் முறையான பரிகாரங்களைச் செய்ய ஜோதிடரை அனுகவும்.
  - ஜோதிடர் சுப்பிரமணியம் M.A., Astro., செல்: 9894720277 

திருமண பொருத்தம், Free Kalyana raasi porutham, Thirumana porutham, திருமணம், நட்சத்திர பொருத்தம், Marriage matching palan.

Marriage matching by star. astrological compatibility, Free Horoscope Matching, Free Marriage Matching, Free Kundali Matching, Horoscope match, Free Match Making, Rasi Match Free, Match Palan, horoscope match, horoscope stars, Free Kalyana raasi porutham for Male and female, Boy and Girl, Groom and Brid

திருமண நட்சத்திர பொருத்தம் - ஆண்களுக்கு
வ.எண்
ஆண் நட்சத்திரத்திற்குபொருத்தமான பெண் நட்சத்திரங்கள்
1.
அஸ்வனிபரணி, மிருகசீரிஷம், புனர்பூசம், பூரம்
2.
பரணிரோகிணி, சுவாதி, உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அஸ்வனி
3.
கார்த்திகை 1 ம் பாதம்சித்திரை 3, 4, அவிட்டம் 1, 2
4.
கார்த்திகை 2, 3, 4 ம் பாதங்கள்அஸ்தம், சித்திரை 1, 2, கேட்டை, அவிட்டம் 3, 4
5.
ரோகிணிமிருகசீரிஷம் 1, 2, உத்திரம், அனுஷம், உத்திரட்டாதி
6.
மிருகசீரிஷம் 1, 2 ம் பாதங்கள்புனர்பூசம் 4, அஸ்தம், பூரட்டாதி, ரேவதி, ரோகிணி
7.
மிருகசீரிஷம் 3, 4 ம் பாதங்கள்திருவாதிரை, புனர்பூசம், அஸ்தம், சுவாதி, பூரட்டாதி 4, ரேவதி
8.
திருவாதிரைபூசம், உத்திராடம் 1, உத்திரட்டாதி, மிருகசீரிஷம் 3, 4
9.
புனர்பூசம் 1, 2, 3 ம் பாதங்கள்பூசம், சுவாதி, பூராடம், உத்திரட்டாதி, ரேவதி
10.
புனர்பூசம் 4 ம் பாதம்பூசம், அனுஷம், பரணி, ரோகிணி
11.
பூசம்உத்திரம், அஸ்வனி, புனர்பூசம் 4
12.
ஆயில்யம்அஸ்தம், அனுஷம், பூசம்
13.
மகம்சித்திரை, அவிட்டம் 3, 4
14.
பூரம்உத்திரம், அஸ்தம், சுவாதி, உத்திராடம் 1, திருவோணம்
15.
உத்திரம் 1 ம் பாதம்பூராடம், ரோகிணி, மிருகசீரிஷம், பூரம்
16.
உத்திரம் 2, 3, 4 ம் பாதங்கள்பூராடம், திருவோணம், ரேவதி
17.
அஸ்தம்உத்திராடம், உத்திரட்டாதி, மிருகசீரிஷம் 3, 4
18.
சித்திரை 1, 2 ம் பாதங்கள்விசாகம் 4, திருவோணம், ஆயில்யம்
19.
சித்திரை 3, 4 ம் பாதங்கள்விசாகம், திருவோணம், சதயம், ஆயில்யம்
20.
சுவாதிஅனுஷம், பூரட்டாதி 1, 2, 3, புனர்பூசம் 4, பூசம்
21.
விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள்சதயம், ஆயில்யம்
22.
விசாகம் 4 ம் பாதம்சதயம்
23.
அனுஷம்உத்திராடம் 2, 3, 4, பூரட்டாதி, ரேவதி, உத்திரம்
24.
கேட்டைதிருவோணம், அனுஷம்
25.
மூலம்அவிட்டம், கார்த்திகை 1, மிருகசீரிஷம் 3, 4
26.
பூராடம்உத்திராடம், திருவோணம், அஸ்வனி, திருவாதிரை, சுவாதி, உத்திரம் 2-3-4, அஸ்தம்
27.
உத்திராடம் 1 ம் பாதம்பரணி, மிருகசீரிஷம் 3, 4, அஸ்தம், பூராடம்
28.
உத்திராடம் 2, 3, 4 ம் பாதங்கள்பரணி, மிருகசீரிஷம் 1, 2
29.
திருவோணம்உத்திரட்டாதி, அஸ்வனி, மிருகசீரிஷம் 1, 2, அனுஷம்
30.
அவிட்டம் 1, 2 ம் பாதங்கள்புனர்பூசம் 4, ஆயில்யம், சுவாதி, விசாகம், திருவோணம்
31.
அவிட்டம் 3, 4 ம் பாதங்கள்சதயம், புனர்பூசம் 1, 2, 3, விசாகம் 4
32.
சதயம்கார்த்திகை, மிருகசீரிஷம், மகம், விசாகம் 4, அனுஷம், அவிட்டம் 3, 4
33.
பூரட்டாதி 1, 2, 3 ம் பாதங்கள்உத்திரட்டாதி, ரோகிணி, பூரம், அனுஷம், பூராடம்
34.
பூரட்டாதி 4 ம் பாதம்உத்திரட்டாதி, பூராடம், திருவோணம், ரோகிணி, பூசம்
35.
உத்திரட்டாதிரேவதி, புனர்பூசம், உத்திரம் 2, 3, 4, உத்திராடம், பூரட்டாதி 4
36.
ரேவதிபரணி, பூசம், அஸ்தம், பூராடம், உத்திரட்டாதி

திருமண நட்சத்திர பொருத்தம் - பெண்களுக்கு
வ.எண்
பெண் நட்சத்திரத்திற்குபொருத்தமான ஆண் நட்சத்திரங்கள்
1.
அஸ்வனிபரணி, திருவாதிரை, பூசம், பூராடம், திருவோணம், சதயம்
2.
பரணிபுனர்பூசம், உத்திராடம், ரேவதி, அஸ்வனி
3.
கார்த்திகை 1 ம் பாதம்சதயம்
4.
கார்த்திகை 2, 3, 4 ம் பாதங்கள்சதயம்
5.
ரோகிணிமிருகசீரிஷம் 1, 2, புனர்பூசம் 4, உத்திரம் 1, பூரட்டாதி, பரணி
6.
மிருகசீரிஷம் 1, 2 ம் பாதங்கள்உத்திரம் 1, உத்திராடம் 2, 3, 4, திருவோணம், சதயம், அஸ்வனி, ரோகிணி
7.
மிருகசீரிஷம் 3, 4 ம் பாதங்கள்திருவாதிரை, உத்திரம், அஸ்தம், மூலம், உத்திராடம் 2, 3, 4, சதயம், பரணி
8.
திருவாதிரைபூரம், பூராடம், பரணி, மிருகசீரிஷம் 3, 4
9.
புனர்பூசம் 1, 2, 3 ம் பாதங்கள்அவிட்டம் 3, 4, உத்திரட்டாதி, மிருகசீரிஷம் 3, 4
10.
புனர்பூசம் 4 ம் பாதம்பூசம், சுவாதி, அவிட்டம் 1, 2, உத்திரட்டாதி, மிருகசீரிஷம்
11.
பூசம்ஆயில்யம், அஸ்தம், சுவாதி, விசாகம் 1-2-3, பூரட்டாதி 4, ரேவதி, திருவாதிரை, புனர்பூசம்
12.
ஆயில்யம்சித்திரை, அவிட்டம் 1, 2
13.
மகம்சதயம்
14.
பூரம்உத்திரம் 1, பூரட்டாதி 1, 2, 3, அஸ்வனி
15.
உத்திரம் 1 ம் பாதம்சுவாதி, அனுஷம், பரணி, ரோகிணி, பூசம், பூரம்
16.
உத்திரம் 2, 3, 4 ம் பாதங்கள்அனுஷம், பூராடம், ரோகிணி, பூசம், பூரம்
17.
அஸ்தம்பூராடம், உத்திராடம் 1, ரேவதி, மிருகசீரிஷம், பூரம், ஆயில்யம், கார்த்திகை 2, 3, 4
18.
சித்திரை 1, 2 ம் பாதங்கள்கார்த்திகை 2, 3, 4, மகம்
19.
சித்திரை 3, 4 ம் பாதங்கள்கார்த்திகை 1, மகம்
20.
சுவாதிபூராடம், அவிட்டம் 1, 2, பரணி, மிருகசீரிஷம் 3, 4, பூரம், புனர்பூசம்
21.
விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள்அவிட்டம் 1, 2, சித்திரை 3, 4
22.
விசாகம் 4 ம் பாதம்அவிட்டம், சதயம், சித்திரை
23.
அனுஷம்கேட்டை, சதயம், பூரட்டாதி 1, 2, 3, ரோகிணி, புனர்பூசம், ஆயில்யம், அஸ்தம், சுவாதி
24.
கேட்டைகார்த்திகை 2, 3, 4
25.
மூலம்உத்திரட்டாதி, பூரம், சுவாதி, பூராடம்
26.
பூராடம்பூரட்டாதி, புனர்பூசம் 1, 2, 3, உத்திரம், ரேவதி
27.
உத்திராடம் 1 ம் பாதம்உத்திரட்டாதி, திருவாதிரை, பூரம், பூராடம், அஸ்தம், சுவாதி
28.
உத்திராடம் 2, 3, 4 ம் பாதங்கள்உத்திரட்டாதி, பரணி, பூசம், அஸ்தம், அனுஷம், பூராடம்
29.
திருவோணம்அவிட்டம் 1, 2, பூரட்டாதி 4, பரணி, புனர்பூசம் 4, உத்திரம் 2, 3, 4, சித்திரை, கேட்டை, பூராடம்
30.
அவிட்டம் 1, 2 ம் பாதங்கள்கார்த்திகை 1, மூலம்
31.
அவிட்டம் 3, 4 ம் பாதங்கள்கார்த்திகை, சதயம், மகம், மூலம்
32.
சதயம்சித்திரை 3, 4, விசாகம், அவிட்டம் 3, 4
33.
பூரட்டாதி 1, 2, 3 ம் பாதங்கள்மிருகசீரிஷம் 1, 2, சுவாதி, அனுஷம்
34.
பூரட்டாதி 4 ம் பாதம்உத்திரட்டாதி, மிருகசீரிஷம், அனுஷம்
35.
உத்திரட்டாதிரேவதி, திருவாதிரை, ரோகிணி, புனர்பூசம் 1, 2, 3, அஸ்தம், திருவோணம், பூரட்டாதி
36.
ரேவதிமிருகசீரிஷம், புனர்பூசம் 1, 2, 3, உத்திரம் 2, 3, 4, அனுஷம், உத்திரட்டாதி

Rasi Palan 2016 - Meenam (ராசி பலன் 2016 - மீன ராசி)



  
Ø  ராசி : மீனம்
Ø  நட்சத்திரம் : பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல்,           உத்திரட்டாதி, ரேவதி முடிய
Ø  அதிஷ்ட கல் : மரகதம்
Ø  அதிஷ்ட வண்ணம் : வெள்ளை
Ø  அதிஷ்ட எண் : 2, 8, 9
Ø  அதிஷ்ட திசை : North - East

ராசி பலன் 2016 - மீன ராசி
வெற்றி வேணுமா போட்டு பார்க்கணும் எதிர்நீச்சல் என்ற கொள்கையுடைய மீனராசி அன்பர்களே!

இந்த ஆண்டில் உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். சரளமான பண வரவால் சந்தோஷம் அடைவீர்கள். நம்பிக்கையுடன் உங்கள் பணிகளில் ஈடுபடுவீர்கள். நண்பர்களுக்கும் உற்றார் உறவினர்களுக்கும் தேவையான உதவிகளைச் செய்து மன நிறைவு அடைவீர்கள். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். மழலைச் செல்வம் இல்லாதவர்களுக்கு அந்தப் பாக்கியம் கிடைக்கும். புதிய முதலீடுகளில் தைரியத்துடன் ஈடுபடுவீர்கள். அதில் உங்களின் முழுத் திறமையை வெளிப்படுத்தி வெற்றி பெறுவீர்கள். பழைய கடன்களும் வசூலாகும். உங்கள் எதிரிகளின் பலம் குறையும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். தர்ம காரியங்களில் ஈடுபடுவீர்கள். மன அழுத்தம் மறையும். சிந்தனையில் தெளிவு உண்டாகும்.

கேது பகவானால் சகோதர, சகோதரிகள் மற்றும் நண்பர்கள் மூலமாக நன்மை அடைவீர்கள். புதிய சொத்துக்களை வாங்குவீர்கள். ஆன்மீகப் பெரியோர்களைச் சந்தித்து அவர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். உங்கள் தோற்றத்தில் பொலிவு உண்டாகும். புத்திசாலிகளின் நட்பைப் பெற்று பலனடைவீர்கள்.

ராகு பகவானால் மன உறுதி உண்டாகும். கவலைகள் மறைந்து மகிழ்ச்சி பிறக்கும். ஏற்றுமதி - இறக்குமதி வியாபாரங்கள் சூடுபிடிக்கும். தூர தேசத்திலிருந்து மகிழ்ச்சி தரும் செய்திகளைக் கேட்பீர்கள். வெளிநாட்டுப் பயணங்களைச் செய்வீர்கள். சேமிப்பு விஷயங்களில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். வெளிவட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். உங்களைப் பற்றி அவதூறாகப் பேசியவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு உண்மை நிலையைப் புரிய வைத்து, நட்பைத் தக்க வைத்துக் கொள்ளும் சந்தர்ப்பம் ஏற்படும். பெற்றோர் மற்றும் நண்பர்கள் வழியில் ஏற்பட்ட மன வருத்தங்களை முற்றிலும் நீக்குவார். குறைந்த அளவு முதலீட்டிலும் அதிக லாபத்தை அள்ளுவீர்கள்.

எண்ணங்களுக்குத் தகுந்த செயல் வடிவம் கொடுப்பீர்கள். எதிரிகளால் தொல்லைகள் ஏற்படாது. உடல் உபாதைகள் ஏதேனும் இருப்பின், இக்கால கட்டத்தில் தீரும். வீண் வழக்குகளிலிருந்து விடுபடுவீர்கள். அலைச்சல்களுடன் நடந்த செயல்கள் நல்லபடியாக முடிவடையும். வெளியில் கொடுத்திருந்த பணம் திரும்பவும் கை வந்து சேரும். சென்ற இடத்திலெல்லாம் பிரச்சினையை சந்தித்தவர்கள்கூட இந்தக் காலகட்டத்தில் விரும்பி வரவேற்கப்படுவார்கள். சிலர் மனம் விரும்பிய வீட்டிற்குக் குடி பெயர்வார்கள். தக்க சமயத்தில் உயர்ந்தவர்களின் நட்பைப் பெற்று கௌரவக் குறைவு ஏற்படாமல் காக்கப்படுவீர்கள். களவு போயிருந்த பொருட்கள் திரும்பவும் கிடைக்கும். உறுதியின்றிச் செய்த வேலைகளில் ஒரு பிடிப்பு ஏற்பட்டு அவை மளமளவென்று நடந்தேறும்.

உத்யோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு தேடி வரும். வருமானம் சீராக இருக்கும். விரும்பிய இடமாற்றங்களும் கிடைக்கும். மேலதிகாரிகளின் அன்பும், ஆதரவும் கிடைக்குமென்றாலும் அவர்களிடம், "மரியாதைக்குரிய தொலைவில்' இருந்து பழகுவது நல்லது. சக ஊழியர்களுடன் நல்ல நட்பு தொடர்வதால் உங்களின் வேலைகள் குறித்த காலத்திற்குள் நிறைவேறிவிடும். உங்களின் வேலைத் திறனைக் கூட்டிக்கொள்ள புதிய அலுவலகப் பயிற்சிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

வியாபாரிகள் போட்டிகளையும், பொறாமைகளையும் சந்தித்தாலும் பொறுமையுடன் செயல்பட்டு அவற்றைச் சமாளிப்பீர்கள். உங்களின் சமயோஜித புத்தியால் பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக்கொள்வீர்கள். புதிய வாடிக்கையாளர்களையும், புதிய சந்தைகளையும் நாடிச் செல்வீர்கள். இந்த ஆண்டு முழுவதும் கொடுக்கல், வாங்கல் விவகாரங்களில் சிரமங்கள் உண்டாகாது. விவசாயிகளுக்கு நீர்வரத்து நன்றாக இருக்கும். எனவே குறித்த காலத்தில் விதைத்து அறுவடை லாபத்தை அள்ளுங்கள். விளை பொருட்களின் விற்பனை மிகவும் நன்றாகவே இருக்கும். அதேசமயம் கால்நடைகளால் பலன்கள் உண்டாகாது.

அரசியல்வாதிகள், தாங்கள் சார்ந்துள்ள கட்சியின் தொண்டர்களுக்கும், நெருங்கியவர்களுக்கும் மிகப் பெரிய உதவிகளைச் செய்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். உங்கள் கெüரவம் உயரும். சமுதாயத்தில் அந்தஸ்து உண்டாகும். உங்களின் முயற்சிகள் உங்களை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லும்.

கலைத்துறையினர் படிப்படியான வளர்ச்சியைக் காண்பீர்கள். வருமானம் நன்றாக இருப்பதால் ரசிகர்களுக்காகச் செலவு செய்வீர்கள். சக கலைஞர்களால் நன்மை அடைவீர்கள். புதிய வாகனங்களை வாங்கும் வாய்ப்பும் கிடைக்கும்.

பெண்மணிகளுக்கு குடும்பத்தில் அமைதி நிலவும். வெளியூர் மற்றும் வெளிநாட்டிலிருந்து இன்பகரமான செய்திகள் வந்து சேரும். கணவரிடம் அனுசரித்து நடந்து கொள்வீர்கள். கணவரின் உறவினர்களோடு வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம்.

மாணவமணிகள் படிப்பில் வெற்றி வாகை சூடுவீர்கள். உங்கள் ஞாபக சக்தியும், அறிவாற்றலும் பெருகும். அதேநேரம் விளையாடும் நேரங்களில் கவனமாக இருக்கவும். பெற்றோர்களின் ஆதரவுடன் உங்களின் எதிர்காலக் கல்வித் திட்டங்களைச் செவ்வனே நிறைவேற்றிக் கொள்வீர்கள்.

 
பரிகாரம் – மீன ராசி

மீன ராசியில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய தெய்வங்கள்;

திருசெந்தூர் செந்திலாண்டவரை தரிசனம் செய்துவர வேண்டும். காவல் தெய்வங்களுக்கு உரிய முறைப்படி வணங்க வேண்டும். இருக்கன்  குடி மாரியம்மன் வழிபாடு செய்தல் வேண்டும்.

மீன ராசியில் பிறந்தவர்கள் ஒவ்வொரு வியாழக்கிழமை சிவபெருமானுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் துன்பங்கள் நீங்கும்.

“ஓம் க்லீம் ஸ்ரீ உத்ராய உத்தாரணே நம”


Rasi Palan 2016 - Kumbam (ராசி பலன் 2016 - கும்ப ராசி)



Ø  ராசி : கும்பம்

Ø  நட்சத்திரம் : அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய

Ø  அதிஷ்ட கல் : நீலக்கல்

Ø  அதிஷ்ட வண்ணம் : பழுப்பு நிற

Ø  அதிஷ்ட எண் : 5, 6, 8

Ø  அதிஷ்ட திசை : மேற்கு


ராசி பலன் 2016 - கும்ப ராசி

  நிதானமாக செயல்பட்டு, வெற்றிக் கனியைப் பறிக்கும் தன்மையுள்ள கும்பராசி அன்பர்களே!
இந்த ஆண்டில்  இனிய பயணங்களைச் செல்வீர்கள். உங்களின் ஆற்றல் அதிகரிக்கும். பகைவர்களை வெற்றி கொள்வீர்கள். உடல் நலம் சீராகும். வருமானம் சிறப்பாக இருக்கும். உங்களின் பெருந்தன்மையை அனைவரும் பாராட்டுவார்கள். அதேநேரம் ஆடம்பரக் கேளிக்கைகளுக்காக செலவு செய்வதைக் குறைத்துக் கொள்ளவும். சில நேரங்களில் யோசிக்காமல் பேசி வம்பில் மாட்டிக் கொள்ள நேரலாம். "யா காவாராயினும் நா காக்க' என்ற வள்ளுவர் வாய் மொழியை எப்போதும் நினைவில் நிறுத்துதல் நலம் பயக்கும். மறைமுக எதிரிகளிடம் கவனமாக இருக்கவும். உங்கள் ரகசியங்களை எவரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம். மற்றபடி உங்களின் பதவியால் சில ஆதாயங்கள் கிடைத்து, மகிழ்ச்சி உண்டாகும். இதன் மூலம் பொதுநலக் காரியங்களுக்குச் செலவு செய்வீர்கள்.

திட்டமிட்ட வேலைகளைத் தள்ளி வைக்க வேண்டிய சூழ்நிலை, சில நேரங்களில் உருவாகலாம். எனவே உங்கள் காரியங்களில் கவனமாக இருக்கவும். மற்றபடி நேர்மையான எண்ணங்களால் உங்களின் வாழ்க்கைத் தரம் உயரும். அலுவலகத்தில் புதிய பொறுப்புகளை ஏற்று நடத்த நல்வாய்ப்பு உருவாகும். இதனால் மனதில் இருந்த காரணமில்லாத வருத்தங்களும், குழப்பங்களும் மறையும்.

உங்கள் பணிகளை விரைவில் செய்து முடிப்பீர்கள். சமூகத்தில் உங்களின் மதிப்பு, மரியாதை உயரும். வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.

உங்களின் எண்ணங்களும், செயல்களும் உங்களுக்கு வாழ்வில் உயர்ந்த இடத்தைப் பெற்றுத் தரும். கடினமாக உழைக்க வைக்கும் ராகு பகவான், அதற்கேற்ற பெரும் பலனைத் தருவதற்கும் தயங்க மாட்டார். அதேநேரம் ஓய்வெடுக்க முடியாமல் போவதால் உடலில் சோர்வு உண்டாகும். எனவே சரியான நேரத்தில் ஆகாரத்தை உட்கொண்டு உடல் வலிமையைத் தக்க வைத்துக் கொள்ளவும். வாகனங்களுக்கு பராமரிப்புச் செலவுகள் செய்ய நேரிடும். தவிர்க்க இயலாத காரணங்களால் சகோதர, சகோதரிகளுக்குப் பணம் செலவழிப்பீர்கள். ஆயின் புதியவர்களின் நட்பால் கைப்பொருளை இழக்க நேரிடும் என்பதால் அதிக அறிமுகமில்லாதோரிடம் கவனமாக இருக்கவும். சுக போக வசதிகளை அனுபவிப்பீர்கள். பயணங்களில் அதிர்ஷ்ட தேவதை தரிசனம் தருவாள். இதனால் பொருளாதார வளமும், சேமிப்பும் உயரும். அரசாங்க உதவிகளும் கிடைக்கும். உங்களின் ஆசைகள் ஒன்றன் பின் ஒன்றாகப் பூர்த்தியடையும்.

உத்யோகஸ்தர்களுக்கு அலுவலகப் பணிகள் சிறப்பாக முடியும். எதிர்பார்த்த பதவி உயர்வும், ஊதிய உயர்வும் பெறுவீர்கள். சிலருக்கு விரும்பிய இடமாற்றங்களும் கிடைக்கும். சக ஊழியர்களின் ஆதரவாலும், நட்பாலும் அலுவலகத்தில் உங்களின் அந்தஸ்து உயரும். சில முக்கியப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண்பீர்கள். மற்றபடி உங்கள் வேலைகளை முன் கூட்டியே யோசித்துச் செய்தால் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம்.

வியாபாரிகள் கூடுதல் எச்சரிக்கையுடன் வாணிபத்தில் ஈடுபடவும். எதையும் ஒரு முறைக்கு இரு முறை யோசித்துச் செயல்படுவது அவசியம். மற்றவர்களிடம் பண விஷயங்களில் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளவும். மற்றபடி வியாபாரத்தை சீரமைப்பதற்கு நீங்கள் சுயமாக மேற்கொள்ளும் முயற்சிகள் நிச்சயம் வெற்றியடையும்.

அரசியல்வாதிகள், மேலிடத்தின் ஆதரவைப் பெறுவீர்கள். ஆனால் அதன் முழுப் பலன்களையும் அனுபவிக்க இயலாத அளவிற்கு மற்றவர்களால் சிறு குறுக்கீடுகளும் தோன்றும். எனினும் மனம் தளராமல் எதிரிகளைச் சமாளிப்பீர்கள். கடினமான வேலைகளையும் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். இதனால் புதிய பொறுப்புகளையும் பெறுவீர்கள். பயணங்களால் நன்மைகள் உண்டாகும். தொண்டர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு செயல்படுவீர்கள்.


கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். உங்களின் முயற்சிகள் அனைத்தும் வெற்றிப் பாதையில் செல்லும். புதிய நட்புகளால் நல்ல வாய்ப்புகளைப் பெறுவீர்கள். சக கலைஞர்களும், ரசிகர்களும் உங்களுக்கு நிறைவான ஆதரவு தருவார்கள். வருமானமும் சீராகவே இருக்கும்.


பெண்மணிகள், மன நிம்மதியைக் காண்பீர்கள். தர்ம காரியங்களிலும், தெய்வ வழிபாட்டிலும் ஈடுபடுவீர்கள். புதிய சொத்துக்கள் வாங்குவதற்கான ஆரம்பகட்ட வேலைகளைத் துவக்குவீர்கள். குடும்பத்தினருடன் சந்தோஷமாகப் பொழுதைக் கழிப்பீர்கள். கணவருடனான ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பப் பொறுப்புகளை திருப்திகரமாக நிறைவேற்றி மகிழ்ச்சி அடைவீர்கள்.

மாணவமணிகள் உற்சாகமான மனநிலையுடன் கல்வியில் ஈடுபடுவீர்கள். உடல் வலிமை பெற தக்க பயிற்சிகளில் ஈடுபடவும். வருங்காலத் திட்டங்களுக்காக அடித்தளம் போடுங்கள். விளையாட்டுகளிலும் வெற்றிகளைப் பெறுவீர்கள். உங்களின் தன்னம்பிக்கை படிப்படியாக உயரும்.

மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையால் வெற்றி பெற வைப்பதாக அமையும்.



பரிகாரம் - கும்ப ராசி


கும்ப ராசியில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய தெய்வங்கள்;


பெருமாள் பத்மாவதி தாயார் வீற்றிருக்கும் திருத்தலங்களுக்கு சென்று தரிசனம் செய்து வர வேண்டும். தேனி மாவட்டம் கோம்பை அருகில் உள்ள ரெங்கநாதர்   மிகுந்த அருள்தருவார் மதுரை அழகர் மலையில் வீற்றிருக்கும் பெருமாளை தரிசனம் செய்யலாம். ஸ்ரீவில்லிபுத்தூர் வனப்பகுதியில் அருள்பாலித்து வரும் காட்டழகரை சனி, புதன் கிழமைகளில் வழிபட்டு வரலாம். 


கும்ப ராசியில் பிறந்தவர்கள் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு அர்ச்சனை செய்து கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன்கள் உண்டாகும்.


“ஓம் ஸ்ரீம் ஸ்ரீ உபேந்திராய அச்சுதாய நமோநம”