மன்மத வருடத்தின் பலன்


இன்று சித்திரை 1யில் தொடங்கும் மன்மத வருடம் எப்படி இருக்குமென சித்தர் இடைக்காடர் சொல்வதை பார்ப்போம்.

 




"மன்மதத்தின் மாரியுண்டு வாழு முயிர்களெல்லாம்
நன்மை பலபொருள் நண்ணும் மன்னரால்
சீனத்திற் சண்டை செழியா துயிரெலாங்
கரணப் பொருள் குறையுங் காண்"

                                                                               - இடைக்காடர்.


பொருள்:
மன்மத வருடப் பலனானது மழைகள் உண்டாகும்,உலக உயிர்களெல்லாம் நலமுடன் இருக்கும்.

நன்மை உண்டாகும். பொன், பொருள் சேரும். 


நம் நாட்டிற்கும் சீனாவிற்க்கும் போர் உண்டாகி நாட்டிற்க்கு கேடு உண்டாகும்.

நாட்டில் பொருளாதார பிரச்சனை உண்டாகும்.

No comments:

Post a Comment