Ø நட்சத்திரம் : விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய
Ø அதிஷ்ட கல் : பவளம்
Ø அதிஷ்ட வண்ணம்: வெளிர் மஞ்சள்
Ø அதிஷ்ட எண் : 1, 2, 3
Ø அதிஷ்ட திசை: தெற்கு
ராசி பலன் 2016 - விருச்சிக ராசி
எதிலும் போராடி வெற்றி காணும் விருச்சிகராசி அன்பர்களே!
இந்த ஆண்டில்சுறுசுறுப்புடன் பணியாற்றுவீர்கள். உடல்சோர்வு முற்றிலும்மறையும். வருமானம்சீராகவே இருக்கும்என்றாலும் பேராசைக்குஇடம் கொடுக்காமல்பணியாற்றவும். நண்பர்கள் போல் பழகும் விரோதிகளிடம்கவனமாக இருக்கவும். அவர்கள் உங்களுக்குஎதிராகச் சிலசமயம் சதிவேலைகளில் ஈடுபடலாம். ஆனாலும் கலங்கவேண்டாம். எதிரிகள்உதிரிகளாகித் தொலைந்து போவார்கள். யாராக இருப்பினும்நன்கு யோசித்தபிறகே வாக்குகொடுக்கவும். மற்றபடி கடன் தொல்லைகள் ஏற்படாது. தர்ம காரியங்களைச்செய்வீர்கள். தடங்கல்களைத் தாண்டி வெற்றியடைவதில் ஐயமேயில்லை. அனுகூலமில்லாத விஷயங்களையும் உங்களுக்குச்சாதகமாக மாற்றிக்கொள்ளும்புத்தி சாதுர்யம்ஏற்படும்.
இந்த ஆண்டு கடினமானசூழ்நிலைகளிலும் உங்களின் தனித் தன்மையை இழக்கமாட்டீர்கள். அடுத்தவர்கள் உங்களுக்கு அறிவுரை கூறும்படிநடந்து கொள்ளமாட்டீர்கள். அரசாங்கத் தொடர்புகள்உங்களுக்குச் சாதகமாகவே அமையும். நீண்ட தூரப்பயணங்களால் நன்மை உண்டாகும். கடுமையாக உழைத்துச்செய்யும் காரியங்களில்வெற்றிவாகை நிச்சயம். தார்மீகச் சிந்தனைகளை மேலோங்கச்செய்வார். ஆன்மீகத்தில்நாட்டம் அதிகரிக்கும். பெரியோர்களைச் சந்தித்து அவர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். உங்கள் உழைப்புவீண் போகாது. இது நாள்வரை உடலில்இருந்த சோர்வும்அயர்ச்சியும் மறையும். தேக ஆரோக்யம் சீராகமாறும். குடும்பத்தில்மருத்துவச்செலவுகள் குறையும். தாயார்வழியில் இருந்துவந்தமன ஸ்தாபங்கள்மறைந்து சுமுகமானஉறவு உண்டாகும். குடும்பத்திலும், உற்றார் உறவினர்களிடமும் உங்கள் செல்வாக்குஉயரும்.
உங்கள் செயல்களைப் புதியஉத்வேகத்துடன் செய்து முடிக்க வழி பிறக்கும். திட்டங்களைச் சரியாகத் தீட்டி அவைகளைப் படிப்படியாக, வெற்றிகரமாக நிறைவேற்றுவீர்கள். புதிய தொழில்களைத் தொடங்குவீர்கள். உங்கள் நண்பர்கள்உங்கள் பேச்சைக்கேட்டு நடப்பார்கள். பெரியோர்களின் ஆதரவு எப்போதுமிருக்கும். ஓய்வு நேரத்தில்கேளிக்கைகளில் ஈடுபட்டு மகிழவும் சந்தர்ப்பங்கள் அமையும். எனினும் ஏழரைநாட்டு சனிபகவான் சமூகத்தில்நலிவடைந்தவர்களுக்கு சேவை செய்துபுண்ணியம் ஈட்டும்வாய்ப்பையே வழங்குவார். இதனால் தன்னலம் பார்க்காமல்உழைத்துப் புகழடைவீர்கள். உங்கள் உடலுழைப்புக்குமேல் பன்மடங்குலாபம் கிடைக்கும். கல்வி, கேள்விகளிலும்சிறந்து விளங்குவீர்கள்.
உத்யோகஸ்தர்கள்பயணங்களால் அனுகூலமான திருப்பங்களைக் காண்பீர்கள். சிலர், விரும்பிய வெளியூருக்குமாற்றலாகிச் செல்வார்கள். மேலதிகாரிகள் சற்று பாராமுகமாகவேநடந்து கொண்டாலும்தொல்லைகள் கொடுக்கமாட்டார்கள்; ஆனால் சக ஊழியர்கள் உங்களுக்குப்பக்கபலமாக இருப்பார்கள். உரிய நேரத்தில்பதவி உயர்வுகிடைக்கும். சோம்பலுக்கு இடம் கொடுக்காமல் உங்கள்வேலைகளைத் திட்டமிட்டுசரியாகச் செய்வதுஅவசியம்.
வியாபாரிகளுக்குதொழிலில் இருந்தபோட்டிகள் குறையும். லாபம் அதிகரிக்கும். நண்பர்களையும், வாடிக்கையாளர்களையும் அரவணைத்துச்சென்று வியாபாரத்தைவிரிவுபடுத்துவீர்கள். கொடுக்கல், வாங்கலில்இருந்த தொய்வுகள்நீங்கி, மனதில்உற்சாகம் தோன்றும். அதேநேரம் வெளியில்கொடுத்திருந்த பணம் திரும்பவும் உங்கள் கைவந்து சேருவதில்தாமதம் ஏற்படும்என்பதால் புதிதாகயாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம்.
அரசியல்வாதிகளின்பணியாற்றும் திறன் அதிகரிக்கும். கட்சி மேலிடத்தால்உற்சாகப்படுத்தப்படுவீர்கள். கட்சியில் புதியபொறுப்புகளைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்யம் நன்றாகஇருக்கும். அடிக்கடி பயணங்களைச் செய்து, கட்சிப்பணிகளைத் தீவிரமாகஆற்றி ஆதாயம்பார்ப்பீர்கள்.
கலைத்துறையினர்எதிர்பார்த்த வாய்ப்புகளைப் பெறுவீர்கள். உங்கள் பெயரும், புகழும் உயரும். ரசிகர்களோடு கருத்து வேறுபாடுகள் ஏற்பட நிறையவேவாய்ப்புண்டு. ஆனால் அவற்றை வெளிக்காட்டிக் கொள்ளாமல்ரசிகர் மன்றங்களுக்குப்பணம் செலவுசெய்வீர்கள். சக கலைஞர்களின் நன்மதிப்பைப் பெறுவீர்கள்.
பெண்மணிகள்கணவரின் பாராட்டுகளைஎளிதில் அடைவீர்கள். புதிதாக ஆடை, ஆபரணங்களை வாங்கிமகிழ்வீர்கள். இல்லத்தில் நிம்மதியைக் காண்பீர்கள். சுபகாரியங்களில் கலந்து கொள்வீர்கள். உடல் நலத்தில்மட்டும் சற்றுகவனமாகவே இருக்கவும்.
மாணவமணிகள்நல்ல மதிப்பெண்களைவாங்க வழிவகையுண்டு. பெற்றோர்களின் ஆதரவு கிடைக்கும். அவர்களால்உங்கள் எதிர்காலத்திட்டங்கள் எளிதில் நிறைவேறும். சக மாணவர்களின்ஒத்துழைப்பைப் பெறுவீர்கள். அவர்களிடம் அனாவசிய சண்டைசச்சரவுகளைத் தவிர்க்கவும். மற்றபடி உங்கள் உடல்நலம் நன்றாகஇருக்கும். தினமும் உடற்பயிற்சிகளைச் செய்தால் மேலும்உடல் வலிமைபெறலாம்.
பரிகாரம் - விருச்சிக ராசி
விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய தெய்வங்கள் ;
உள்ளூர் சிவன் கோயிலில் உள்ள தட்சணாமூர்த்தி சுவாமிக்கு வியாழக்கிழமைதோறும் ஜென்ம நட்சத்திரத்திற்கு அர்ச்சனை செய்து மஞ்சள் ஆடை சார்த்தி 108 கொண்டக்கடலை நிறைந்த மாலையிட்டு மனம் உருக பிரார்த்தனை செய்ய வேண்டும். குரு ஓரையில் வழிபாடு செய்வது சிற்ப்பு ஆகும்.
விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் செவ்வாய்க்கிழமை விரதம் இருந்து துர்க்கையை பூஜித்து வணங்கி கீழ்க்கண்ட சுலோகத்தை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன் ஏற்படும்.
|
***
.
..
.
.
.
.
..
.
..
.
.
.
.
..
.
..
.
.
.
.
..
No comments:
Post a Comment